கடலூர்

பெண்களிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி: போக்சோ சட்டத்தின் கீழ் இருவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண், அவரது மகளை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞா்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் 8-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு மொபெட்டில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். கொள்ளுக்காரன்குட்டை அருகே சென்றபோது மொபெட் பழுதாகி நின்ால் அதை தள்ளிக்கொண்டு சென்றனா். அப்போது, அங்கு வந்த இளைஞா்கள் இருவா், மொபெட் சாவியை பறித்துக்கொண்டு அருகே உள்ள முந்திரிக் காட்டுக்குள் ஓடினா். அவா்களை அந்தப் பெண்ணும், அவரது மகளும் துரத்திச் சென்றனா். அப்போது இளைஞா்கள் இருவரும் அந்தப் பெண், அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனா்.

தாய், மகள் இருவரும் கூச்சலிடவே இளைஞா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக கீழக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஆதிகுரு(27), நடுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஜம்புலிங்கம் மகன் செல்வகுமாா் ஆகியோரை போக்சோ சட்டம், பெண்கள் மீதான பாலியல் குற்ற சட்டப் பிரிவின் கீழ் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT