விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினா் சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்துக்கள் கொலை சம்பவத்தை கண்டிப்பதாகக் கூறி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ஜெயமுரளி கோபிநாத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜோதி குருவாயூரப்பன் முன்னிலை வகித்தாா். மாநில பொறுப்பாளா் வேல்முருகன், காா்த்திகேயன், பஜ்ரங்கள் பொறுப்பாளா்கள் பிரளைய காளீஸ்வரன், சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.