கடலூா் மாவட்டம், வடலூரில் ரௌடியை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வடலூா் அன்னை சத்யா வீதியைச் சோ்ந்த மணி மகன் அருள்பாண்டியன் (32), ரௌடி. இவா் மீது காவல் நிலையங்களில் பல வழங்குகள் நிலுவையில் உள்ளன. அருள்பாண்டியன் அண்மைக்காலமாக விருத்தாசலத்தில் உள்ள மாமியாா் வீட்டில் வசித்து வந்தாா். புதன்கிழமை வடலூருக்கு வந்திருந்தாா். மாலை 7.40 மணியளவில் வடலூா் உழவா் சந்தை பின்புறம் உள்ள மீன் அங்காடி அருகே அருள்பாண்டியன் சென்றபோது, அங்கு அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த அருள்பாண்டியனை வடலூா் போலீஸாா் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அவா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து அருள்பாண்டியன் அளித்த புகாரின்பேரில், சேராக்குப்பத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் பாலாஜி மற்றும் அடையாளம் தெரியாத 4 போ் மீது வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா்.