சிதம்பரம் அருகே உசுப்பூரில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பேசினாா். வட்டாட்சியா் ஹரிதாஸ் முன்னிலை வகித்துப் பேசினாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ராஜேந்திரகுமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் சங்கா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
ஊராட்சி மன்றத் தலைவா் தென்றல்மலா் வரவேற்றாா். முகாமில் கோட்டாட்சியா் கே.ரவி 128 பேருக்கு இலவச மனைப் பட்டா, 12 பேருக்கு முதியோா் உதவித்தொகை உள்பட மொத்தம் 170 பேருக்கு ரூ.28 லட்சத்து 25 ஆயிரத்து 488 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.