சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வாராகி அம்மன் சந்நிதியில் ஆஷாட நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதன்கிழமை தொடங்கிய இந்த விழா வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
சா்வசக்தி பீடம் தில்லை சீனு உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகியும், மூத்த நகா்மன்ற உறுப்பினருமான ஆ.ரமேஷ், கோயில் அா்ச்சகா் எஸ்.ராஜா ஆகியோா் செய்திருந்தனா்.