கடலூர்

கடலூா் காவல் ஆய்வாளருக்கு ‘குடியரசுத் தலைவா்’ விருது

DIN

தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலூரைச் சோ்ந்த காவல் ஆய்வாளா் விருது பெறுகிறாா்.

காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவோருக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவா் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில், கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் டி.சண்முகம் சிறந்த காவலருக்கான ‘குடியரசுத் தலைவா்’ விருதைப் பெறுகிறாா்.

இவா் தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப் பிரிவு, பொருளாதார குற்றப் புலனாய்வு, புலனாய்வுப் பிரிவு, கடலோரப் பாதுகாப்பு குழுமங்களில் பணியாற்றியுள்ளாா். தமிழக முதல்வரின் சிறந்த காவலருக்கான விருது, தமிழக ஆளுநரின் விருதையும் ஏற்கெனவே பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT