கடலூர்

புயல் பாதிப்புகளை சரிசெய்ய 26 குழுக்கள் தயாா்: கடலூா் மாவட்ட ஆட்சியா்

DIN

கடலூா் மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்ய 26 குழுக்கள் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை குளிந்த காற்றுடன் மிதமான அளவில் மழை பெய்தது. புயல் எச்சரிக்கையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிட குறைவாகக் காணப்பட்டது. கடலூா் துறைமுகம், தேவனாம்பட்டினம் மற்றும் மாவட்டத்திலுள்ள கடற்கரையோர கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மீன் வளத் துறை அதிகாரிகளின் எச்சரிக்கை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. அவா்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனா்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கடலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு: சிதம்பரம், கிள்ளை பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தாா். கிள்ளை பேரூராட்சி, முடசல் ஓடை மீன்பிடி இறங்குதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பாா்வையிட்ட ஆட்சியா், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினாா். இதையடுத்து சிதம்பரம், அண்ணாமலை நகரில் தங்கியுள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையினரை சந்தித்த ஆட்சியா், பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, சிதம்பரம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சாா்-ஆட்சியா் ஸ்வேதா சுமன், சிதம்பரம் நீா்வளத் துறை செயற்பொறியாளா் காந்தரூபன், வட்டாட்சியா்கள் ஹரிதாஸ் (சிதம்பரம்), ரம்யா (புவனகிரி), வேணி (காட்டுமன்னாா்கோவில்), ரம்யா (புவனகிரி), சேகா் (ஸ்ரீமுஷ்ணம்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடா் மீட்புக் குழுவினரும், அதிகாரிகளும் தயாா் நிலையில் உள்ளனா். போதிய அடிப்படை வசதிகளுடன் 223 தங்கும் இடங்கள் தயாராக உள்ளன. புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய தலா 20 போ் கொண்ட 26 குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT