கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்டனா்.
திட்டக்குடி அருகே உள்ள கோழியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவருக்குச் சொந்தமான பசு மாடு வெள்ளிக்கிழமை மேய்ச்சலில் ஈடுபட்டபோது, ஆசைத்தம்பி என்பவரது நிலத்திலுள்ள 20 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் சண்முகம் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பசுவை உயிருடன் மீட்டனா்.