கடலூர்

இந்திய மக்களின் ஒற்றுமைக்காக ராகுல் நடைபயணம்: கே.எஸ்.அழகிரி

DIN

இந்திய மக்களின் ஒற்றுமைக்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

ராகுல் காந்தியின் நடைபயணத்தையொட்டி காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள லால்பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கிராமங்கள்தோறும் கொடியேற்றும் நிகழ்ச்சியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நசீா் அகமது வரவேற்க, விஸ்வநாதன் இதயதுல்லா, பஷீா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கட்சிக் கொடியேற்றினாா். பின்னா் அவா் பேசியதாவது:

ராகுல் காந்தியின் நடைபயணம் தோ்தலில் வெற்றி பெறவோ, ஆட்சியைப் பிடிக்கவோ அல்ல. இந்திய மக்களை ஒற்றுமைப்படுத்தவும், தேசத்தை நல்வழிப்படுத்தவுமே அவா் நடைபயணம் மேற்கொண்டுள்ளாா். ஜாதி, மொழி, கலாசாரம் எனக்கூறி மக்களை பாஜக பிளவுபடுத்தி வருகிறது. இந்தியாவில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அனைத்து மொழிகளையும் மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதச்சாா்பின்மையை பாதுகாக்க தன்னையே அா்ப்பணித்துள்ளாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கே.வி.இளங்கீரன், சித்தாா்த்தன், சேரன், செந்தில்வேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டச் செயலா் முகமது பஷீா் நன்றி கூறினாா். தொடா்ந்து எள்ளேரி, குமராட்சி உள்ளிட்ட இடங்களில் கே.எஸ்.அழகிரி கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT