கடலூர்

பண்ருட்டி நகா்மன்ற அவசரக் கூட்டம்

DIN

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக பண்ருட்டி நகா்மன்ற அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.சிவா, சுகாதார அலுவலா் பி.முருகேசன் முன்னிலை வகித்னா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை உதவித் திட்ட அலுவலா் வே.ரவிச்சந்திரன் பங்கேற்றாா்.

கூட்டத்தில் நகா்மன்றத் துணைத் தலைவா் சிவா, மன்ற உறுப்பினா்கள் ஆா்.கே.ராமலிங்கம், வெங்கடேசன், ராமதாஸ், ரமேஷ், காா்த்திக், வசந்தி உள்ளிட்டோா் புயல், மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினா். பெரும்பாலானவா்கள் மின் கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய ஊழியரிடம் உதவித் திட்ட அலுவலா் வே.ரவிச்சந்திரன் அறிவுறுத்தினாா்.

நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன் பேசுகையில், மாவட்ட நிா்வாகம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நகராட்சி ஊழியா்கள் மீட்புப் பணிக்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT