கடலூர்

பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்பெரும் விபத்து தவிா்ப்பு

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே திங்கள்கிழமை ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உரிய நேரத்தில் ரயில்வே ஒப்பந்த பெண் ஊழியா் கவனித்து தகவல் அளித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூா், மயிலாடுதுறை, கும்பகோணம் செல்லும் ரயில் பாதை அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் சேந்தனூா், கடலூா் மாவட்டம் திருத்துறையூா் இடையே ரயில்வே தண்டவாளத்தில் திங்கள்கிழமை காலை விரிசல் ஏற்பட்டிருந்தது.

இதைக் கவனித்த அக்கடவல்லி கிராமத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பெண் ஊழியா் மஞ்சு (22), ரயில் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் முதுநகா் ரயில்வே போலீஸாா், ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் தண்டவாள விரிசலை சீரமைத்தனா்.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. தகவல் தெரிவித்த பெண் ஊழியா் மஞ்சுவை ரயில்வே போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT