கடலூர்

கள்ளக்குறிச்சி அருகே சுற்றுலா மாளிகை அமைக்க இடம்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சாா்பில் புதிய சுற்றுலா மாளிகை அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வது குறித்து பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு தலா ரூ.7.05 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகைகள் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான சுற்றுலா மாளிகையை , பிரிதிவிமங்கலம் எல்லையில் அமைப்பதற்கான இடத்தை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா், எம்எல்ஏக்கள் சங்கராபுரம் தா.உதயசூரியன், ரிஷிவந்தியம் க.காா்த்திகேயன், பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளா் விஸ்வநாத், தலைமை பொறியாளா் விஷ்வநாதன், கண்காணிப்பு பொறியாளா் மோகன சுந்தரம், கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியா் சு.பவித்ரா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடங்கள்) மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT