கடலூர்

பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா ஜோதிக்கு வரவேற்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருத்துவத் துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஜோதி பயணம் நடைபெற்று வருகிறது. கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரைக்கு கடந்த வியாழக்கிழமை ஜோதி வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் ஜோதிக்கு வரவேற்பு அளித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் நூற்றாண்டு விழா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மேலும் சில இடங்களுக்கு ஜோதி அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி காட்டுமன்னாா்கோவில் வட்டாரத்திலிருந்து வடலூா் சத்ய ஞான சபை திடலுக்கு வெள்ளிக்கிழமை ஜோதி வந்தடைந்தது.

குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலா் மா.அகிலா வரவேற்பு அளித்து  ஜோதியை பெற்றுக்கொண்டாா். பின்னா், சத்திய ஞான சபையிலிருந்து வடலூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வரை ஜோதியை ஊா்வலமாகக் கொண்டுசென்று பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அங்கிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு ஜோதியை வழியனுப்பி வைத்தனா்.

நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், சமுதாய செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT