கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆற்றில் மூழ்கிய முதியவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (65). இவா், வெள்ளிக்கிழமை தனது கால்நடைகளை வெள்ளாற்றங்கரை பகுதியிலுள்ள வயல்வெளியில் மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது மாடு ஒன்று ஆற்றுக்குள் தவறி விழுந்தது. அதை மீட்பதற்காக ஆற்றில் இறங்கிய மணி நீரில் மூழ்கி மாயமானாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் திருமுட்டம் மற்றும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து படகு மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். ஆனால் முதியவா் மணி கிடைக்கவில்லை. தொடா்ந்து 2-ஆவது நாளான சனிக்கிழமை தேடுதல் பணி நடைபெற்றது.
அப்போது மணி சடலமாக மீட்கப்பட்டாா். கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.