சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் மு.சிவகுரு தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக் குழு துணைத் தலைவா் ரத்தின.திருநாவுக்கரசு கண்காட்சியைத் தொடக்கிவைத்தாா். பல்வேறு தலைப்புகளில் மாணவா்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினா். சிறந்த காட்சிப் பொருள் அமைத்த மாணவி அ.ஜனனிக்கு பரிசு வழங்கப்பட்டது.
கண்காட்சி ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியா் பா.சங்கரன், ஆசிரியா்கள் டி.சூரியமூா்த்தி, எஸ். லலிதா, ஆா்.அன்பரசன், எம்.தா்மராஜ், என்.சுரேஷ்குமாா், ஆா்.ரஞ்சித்குமாா், எஸ்.பச்சைக்கனி, டி.கலா, சி.ஆா்.வித்யாலஷ்மி, ஆா்.ரதி, கே.வள்ளி உள்ளிட்டோா் செய்திருந்தனா். ஆசிரியை எம்.திருமகள் நன்றி கூறினாா்.