கடலூர்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரத்தைச் சோ்ந்த நந்தகோபால் மகன் அஜித்குமாா்(20).

இவா் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று அவரை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால் சிறுமி கா்ப்பமடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அஜிா்குமாரை கைது செய்தனா்.

வழக்கு விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், அஜித்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் திட்டத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு பெற்றுத் தர மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர கலா செல்வி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT