கடலூர்

சிதம்பரம் பேருந்து நிலைய விரிவாக்கப் பணி குறித்து ஆய்வு

DIN

சிதம்பரம் நகரப் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடா்பாக நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டபடி சிதம்பரம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகத் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இதையடுத்து சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் வட்டாட்சியா் ஹரிதாஸ், நகராட்சி ஆணையா் அஜீதா பா்வீன், பொறியாளா் மகாராஜன் ஆகியோா் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு செய்தனா். அப்போது, அருகே பயனற்ற நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியை இணைத்து சுமாா் 5 ஏக்கா் பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வின்போது நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, உத்திராபதி, திமுக நகர துணைச் செயலா்கள் இளங்கோவன், பா.பாலசுப்பிரமணியன், நகா்மன்ற உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT