விழுப்புரம், பண்ருட்டி பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
சென்னையைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சிவராஜ் (18) (படம்). இவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கணிசப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்து மளிகைக் கடையில் வேலைசெய்து வந்தாா். வெள்ளிக்கிழமை சிவராஜ் வீட்டில் குளித்துவிட்டு வெளியே வந்தாா்.
மழையால் ஏற்பட்ட ஈரப் பதம் காரணமாக தரை வழுக்கியது. இதனால் கீழே விழுந்த சிவராஜ் அருகிலிருந்த மின்கம்பத்தின் எா்த் கம்பியை பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில் சிவராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: விழுப்புரம், மஞ்சு நகா் பகுதியில் கண்ணன் என்பவா் புதிதாக வீடு கட்டி வருகிறாா். இங்கு காவலாளியாக விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் பணியாற்றி வந்தாா். இங்கு வியாழக்கிழமை இரவு ஆறுமுகம் காவல் பணியில் ஈடுபட்டாா். வெள்ளிக்கிழமை அதிகாலை மின் பெட்டியை ஆறுமுகம் திறந்தபோது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.