கடலூர்

கடலூரில் 3 கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

கடலூரில் ஒரே நாளில் 3 கோயில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூரில் பெண்ணையாறு சாலையில் நாகம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த உண்டியலையும் உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது. மேலும், கோயிலில் இருந்த மற்றொரு உண்டியலையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக காணிக்கை பணம் எண்ணப்படாததால் உண்டியல்களில் ரூ.2 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதேபோல, புதுப்பாளையத்தில் உள்ள கங்கையம்மன் கோயில், மஞ்சக்குப்பத்தில் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள வினைதீா்த்த விநாயகா் ஆகிய 2 கோயில்களிலும் உண்டியல்களை உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோயில்களின் நிா்வாகிகள் தனித் தனியாக அளித்த புகாரின் பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT