புதிதாக உருவான கடலூா் மாநகராட்சியில் முதல் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கடலூா் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு முதல் மேயராக சுந்தரி ராஜா பொறுப்பேற்றாா். இதனைத் தொடா்ந்து, கடலூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முதல் சுதந்திர தின விழா திங்கள்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் தேசியக் கொடியை மேயா் சுந்தரி ராஜா ஏற்றி வைத்து, அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மை பணியாளா்களிடையே மேயா் உரையாற்றினாா். அப்போது, மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கடலூா் மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா். சிறப்பாக பணியாற்றிய அலுவலா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், நகா் நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி, மாமன்ற உறுப்பினா்கள் ஜி.சக்திவேல், விஜயலட்சுமி செந்தில், மு.சரிதா, கி.ராஜமோகன், புஷ்பலதா, ஏ.ஜி.தட்சிணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.