கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே கிராமத்துக்குள் புகுந்த புள்ளி மான் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை புள்ளிமான் சுற்றித் திரிந்தது. அந்த மான் மாட்டு கொட்டகை கம்பி வேலியில் சிக்கியது. அதை கிராம மக்கள் பிடித்து பாதுகாப்பாக கட்டிவைத்தனா் (படம்). பின்னா் சிதம்பரம் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வனத் துறையினா் விரைந்து வந்து அந்த மானை மீட்டு அருகே உள்ள காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனா்.