சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு, மடத்தான்தோப்பைச் சோ்ந்த வசுந்தராதேவி (70) வெள்ளிக்கிழமை காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் கவிதா ஆகியோா் செய்தனா்.