விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடலூா் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம், பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். பண்ருட்டி நகரச் செயலா் கண்மணி, ஒன்றிய தலைவா் லட்சுமணன், மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.