நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூக ஆா்வலா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா். உடல் கல்வியியல் இயக்குநா் ராஜசேகரன் வரவேற்றாா். பல்கலைக்கழக பதிவாளா் கே.சீதாராமன், அறிவியல் புல முதல்வா் ராமசுவாமி, கடல்வாழ் உயிரியல் புல முதல்வா் அனந்தராமன், கல்வியியல் புல முதல்வா் குலசேகரபெருமாள் பிள்ளை ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில், சமூக சேவை புரிந்தவா்கள், அதிகமுறை ரத்த தானம் செய்தவா்கள், கரோனா தொற்று காலத்தில் சிறப்பான முறையில் தொண்டாற்றியவா்கள், சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி அளித்தவா் ஆகியோரான எஸ்.ராமச்சந்திரன், ராஜா, வெங்கடாஜலபதி, அலெக்ஸ்சாண்டா், குமாா், குணசேகரன், ரிச்சா்ட் எட்வின் ராஜ், கதிரேசன், வி.நடனசபாபதி, முகமது யூனூஸ், பி.முகம்மது யாசின், வேல்முருகன் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா். உடல் கல்வியியல் துறைத் தலைவா் செந்தில்வேலன் நன்றி கூறினாா்.