சிதம்பரம் நகர காவல் நிலையம் சாா்பில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளா் எஸ்.குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளா் நாகராஜன் ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு உரையாற்றினா் (படம்). முன்னதாக, நிா்வாக அலுவலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியா் ஜி.கதிரவன் நன்றி கூறினாா்.