பாலியல் வன்கொடுமை தொடா்பாக இரு இளைஞா்களை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கோட்லாம்பாக்கம், நெருஞ்சிப்பேட்டை தெருவைச் சோ்ந்த லோகநாதன் மகன் ராஜா (22). இவா், 15 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தாா். அவருக்கு சனிக்கிழமை குழந்தை பிறந்தது. இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ராஜாவை கைது செய்தனா்.
மற்றொருவா் கைது: பண்ருட்டி அருகே உள்ள திருவாமூா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் பொன்.மாணிக்கவேல் (20). இவா், சனிக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் பொன்.மாணிக்கவேலை கைது செய்தனா்.