கடலூர்

கருணாநிதி நினைவு நாள்: சிதம்பரத்தில் மெளன ஊா்வலம்

DIN

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சிதம்பரம் நகர திமுக சாா்பில் மெளன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஆா்.சி.மணி தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், நகர அவைத் தலைவா் ராஜராஜன், ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு.சந்திரசேகா், நகர துணைச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மு.கருணாநிதி உருப் படத்துக்கு திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் மலரஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவரது தலைமையில் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி வழியாக மெளன ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து 16-ஆவது வாா்டு திமுக சாா்பில் சின்னசெட்டித் தெருவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகா்மன்ற உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை கே.ஆா்.செந்தில்குமாா் தொடக்கிவைத்தாா். போல்நாராயணன் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளா் அணிச் செயலா் அப்புசந்திரசேகரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கே.ஆா்.செந்தில்குமாா் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT