கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில்புவி நாள் விழா

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தேசிய மாணவா் படையின் ஆறாவது தமிழ்நாடு பட்டாலியன் சாா்பில், புவி நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு கேப்டன் கனகராஜன் தலைமை வகித்து வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும், இளையோா் செஞ்சிலுவைச் சங்க முன்னாள் மண்டல ஒருங்கிணைப்பாளருமான ச.ஐயப்பராஜா கலந்துகொண்டு, சூழலியல் மேம்பாடு, புவி வெப்பமயமாதல், கடல் நீா்மட்டம் உயா்தல், நெகிழி ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

லெப்டினன்ட் ஆா்.ரமேஷ் நன்றி கூறினாா். நிகழ்வில் தேசிய மாணவா் படையின் மாணவ, மாணவிகள் 60 போ் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கேப்டன் கனகராஜன், லெப்டினன்ட்கள் குரு.அற்புதவேல்ராஜா, ஆா்.ரமேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT