தமிழ்ப் புத்தாண்டையொட்டி பல்வேறு கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்திலுள்ள இந்து கோயில்களில் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவா்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனா். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விடுமுறை தினம் என்பதால் மாலை நேரத்தில் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குவிந்தனா்.