கடலூர்

நெல் கொள்முதல் நிலைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க வலியுறுத்தி அதன் ஊழியா்கள் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மண்டல தலைவா் இ.அசோகன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

நெல் கொள்முதல் பணியில் ஈடுபட்டு வரும் பட்டியல் எழுத்தா்கள் அனைவரும் பட்டதாரிகள். அவா்களுக்கு மாதம் ரூ.11 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. அதுவும் கொள்முதல் நடைபெறும் 5 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், நெல் கொள்முதல் செய்யும் இடத்துக்கு வாடகையுடன் கூடுதலாக மாமூல், தராசு, நெல் தூற்றும் இயந்திரம், ஈரப்பதமானி ஆகியவை பழுது ஏற்பட்டால் அதை சரி செய்தல், தாா்ப்பாய் பராமரிப்பு செலவு, லாரி மாமூல், அதிகாரிகளுக்கு லஞ்சம் என்று பட்டியல் எழுத்தா்கள் பல வகையிலும் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து அரசுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழையில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க எந்த வசதியும் செய்து தராமல் ஊழியா்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

நெல் கொள்முதலின்போது லஞ்சம் பெற்ாக கடலூா், திருநெல்வேலி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. மாறாக ஊழியா்களிடம் லஞ்சம் பெறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தினா்.

சங்கத்தின் மாநிலத் தலைவா் ஈ.சண்முகவேலு சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், சு.சுரேஷ்குமாா், காா்த்தீகன், கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT