கடலூர்

சிவகாமசுந்தரி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவ கொடியேற்றம்

DIN

 சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகங்கை மேற்குக் கரையில் திருக்காமகோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் வரும் 30-ஆம் தேதி திருத்தோ் உற்சவமும், 31-ஆம் தேதி பட்டு வாங்குதல் மற்றும் பூரச் சலங்கை உற்சவமும், நவ.1-ஆம் தேதி காலை தபசு உற்சவமும், அன்று இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீசோமாஸ்கந்தா் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT