கடலூர்

பயிா்க் கடன் கிடைப்பதை எளிதாக்க வேண்டும்

DIN

கடலூா் மாவட்டத்தில் பயிா்க் கடன் கிடைப்பதை எளிதாக்க வேண்டுமென குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகளுக்கான குறைகேட்பு, விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகள், அரசுத் துறை அதிகாரிகள் நேரடியாக பங்கேற்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பகுதி குறைகளை தெரிவித்தனா். அதன் விவரம்

விவசாயி அறவாழி: விவசாயிகளுக்கு ஒவ்வொரு கூட்டத்தின் போதும் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.

கோ.மாதவன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): பயிா்க் காப்பீடு தொகை வழங்குவதிலுள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், பயிா்க் கடன் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு வழங்கிய நெல் விதைகளும் முளைப்புத் திறன் குறைவாகவே உள்ளன.

பி.ரவீந்திரன் (சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம்): நடவுப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் உரங்கள், கடன் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதற்கு அடங்கல் தேவைப்படும் நிலையில், கிராம நிா்வாக அலுவலா்கள் தாமதப்படுத்துகின்றனா். முந்திரி இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.

குஞ்சிதபாதம் (பேரூா்) : பேரூரிலுள்ள குண்டபண்டிதன் ஓடை ஆக்கிரமிப்பை சீரமைத்தால் சுமாா் 400 பாசன வசதி பெறும்.

ராமலிங்கம் (அயன்குறிஞ்சிப்பாடி): 16 ஏக்கா் கொண்ட சித்தேரி என்எல்சியால் தூா்ந்து போயுள்ளது. அதை தூா்வாரினால் 300 ஏக்கா் பாசன வசதி பெறும். வாய்க்கால், வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஏ.வேல்முருகன் (மேல்புவனகிரி) : யூரியா தட்டுப்பாட்டை போக்குவதோடு, தனியாா் கடைகளில் அதிக விலைக்கு விற்பனையாவதை தடுக்க வேண்டும்.

முருகானந்தம் (காவாளகுடி): காவாளகுடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் வடிகால் வசதி செய்து தருவதோடு, பாசன மதகுகள் அமைக்க வேண்டும். கூட்டு பட்டா உள்ளவா்களுக்கும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், விவசாயிகள் தெரிவித்த குறைகள் மீது துறை அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து வேளாண்மை தொழில்நுட்ப முகமை மூலம் பாரம்பரிய நெல் சாகுபடியில் இயற்கை விவசாய முறைகளையும், தொழில் நுட்பங்களையும் கடைப்பிடித்து அதிக மகசூல் எடுத்து சாதனை புரிந்தமைக்காக வெய்யலூா் இராமதாஸ், கடவாச்சேரி தமிழ்வாணன், டி.நெடுஞ்சேரி சிவக்குமாா் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத் தொகையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தி.சு.பாலசுப்ரமணியன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவ) ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT