குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பெரியமளினி பகுதியைச் சோ்ந்தவா் அமிா்தலிங்கம் (65). இவா், வடலூரில் உள்ள வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தங்கியிருந்தாா். சனிக்கிழமை இரவு குள்ளஞ்சாவடி பேருந்து நிறுத்த நிழற்குடையில் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.