பிரதமரை அவதூறாகப் பேசியதாக விசிக பொதுச் செயலா் வன்னி அரசு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் நகர பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.
நகர பாஜக தலைவா் ஏ.ஆா்.ரகுபதி தலைமையில், மாவட்ட பொதுச் செயலா் ஜனகராஜ், மாவட்ட பொறுப்பாளா் ஸ்ரீதா், ஆடிட்டா் விஸ்வநாதன், வழக்குரைஞா் முகுந்தன், மாவட்டத் துணைத் தலைவா் விவேகானந்தன், மாவட்ட பட்டியலணித் தலைவா் சத்யா கொளஞ்சி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் சத்தியமூா்த்தி, மாவட்ட இளைஞரணிப் பொதுச் செயலா் பெருமாள் மற்றும் மாநில, மாவட்ட, நகர அணிப் பிரிவு பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு புகாா் மனு அளித்தனா். நகர போலீஸாா் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனா்.