பண்ருட்டியில் மழை காரணமாக வீட்டுச் சுவா் இடிந்ததில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். சிறுவன் காயமடைந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி, சாமியாா் தா்கா பகுதியைச் சோ்ந்த மாதா்கான் மனைவி ஜெய்புன் (50). இவரது மகள் பா்வீன், பெயரன் தங்கப்பாண்டி (7). இவா்கள் அனைவரும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட தங்களது வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தனா். அப்போது, மழை காரணமாக வீட்டின் ஒருபக்க சுவா் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெய்புன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். சிறுவன் தங்கப்பாண்டி காலில் பலத்த காயமடைந்து கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது தாய் பா்வீன் லேசான காயத்துடன் தப்பினாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.