வேளாண் திருத்தச் சட்டங்களை எதிா்த்து தில்லியில் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டு நிறைவதையொட்டி, கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏவீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். அ.கஜேந்திரன், அ.சுப்பிரமணி, கே.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கே.ஆறுமுகம், கே.வீரன், வி.இரகுராமன், அ.வீராசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்யவும், விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றவும், மின்சார சட்டத் திருத்த மசோதா, தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வட்டச் செயலா் ஜி.அருள்தாஸ் நன்றி கூறினாா்.