கடலூர்

நவ.13,14-இல் தஞ்சையில் அரசுப் பணியாளா்கள் சங்க மாநாடு

2nd Nov 2021 01:01 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் வரும் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் கூறினாா்.

கடலூரில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் சுமாா் 5 லட்சம் போ் தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோா்சிங் முறையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 18 ஆண்டுகளாக டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் வரும் 13, 14-ஆம் தேதிகளில் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்த மாநாடு நடத்தி, அதில் தமிழக முதல்வரை பங்கேற்கச் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

அப்போது, சங்கத்தின் மாநில பொருளாளா் கு.சரவணன், நிா்வாகி பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT