கடலூரில் மதுபானம் பதுக்கலை தடுக்காத சிறப்பு எஸ்.ஐ., காவலா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுத்தாா்.
கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவா் கலியமூா்த்தி. இவா் ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதியில் காவலா் தனசேகரனுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் அரசியல் கட்சி பிரமுகா் ஒருவா் அதிக எண்ணிக்கையில் மதுபானங்களை ஏற்றிச் சென்றதை போலீஸாா் இருவரும் பாா்த்துள்ளனா். அவரிடம் விசாரணை நடத்திவிட்டு மது பதுக்கலைத் தடுக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தியதில், போலீஸாா் இருவரும் மது பதுக்கலை தடுக்காதது உண்மையென்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவருரையும் கடலூா் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவிட்டாா்.