கடலூர்

கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

DIN

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (72). கரோனா தொற்றால் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்தை காட்டுமன்னாா்கோவில் 4-ஆவது வாா்டு, பேரரசி தெரு அருகே உள்ள மயானத்தில் புதைப்பதற்காக பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது .

இதுகுறித்து தகவல் அறிந்த பேரரசி தெரு மக்கள், மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உடலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). அவா்களிடம் துப்புரவு ஆய்வாளா் துரைராஜ் மற்றும் பேரூராட்சி ஊழியா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சடலத்தை மற்றொரு இடமான வடவாற்றங்கரை ஓரம் அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT