தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் 4-ஆம் ஆண்டு மாணவிகள், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அயன்குறிஞ்சிப்பாடியில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்றனா்.
இவா்கள் நெல், உளுந்து, மணிலா பயிா்களின் சாகுபடி அனுபவங்களை முன்னோடி விவசாயிகள் குப்புசாமி, வைத்தியநாதன், ராமலிங்கம் ஆகியோரிடம் சனிக்கிழமை கேட்டறிந்தனா். மேலும், மணிலா பிரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை பாா்வையிட்டனா். செம்பருத்தி தேனீா் தயாரிக்கும் முறை குறித்து உழவா் மன்ற விவசாயிகள் விளக்கம் அளித்தனா். ஏற்பாடுகளை உழவா் மன்ற விவசாயிகள் செய்திருந்தனா்.