கடலுாா் துறைமுகத்தில் ரூ.100 கோடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகளை மீன்வளத் துறை ஆணையா் பழனிச்சாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மீனவா் கட்டமைப்பு வளா்ச்சி நிதியில் (எப்.ஐ.டி.எப்) ரூ.100 கோடியில் மேற்கூறிய பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆணையா் பழனிச்சாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முடிக்கப்பட்ட பணிகள், நிலுவை பணிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த அவா், வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் மீன்பிடி துறைமுகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட மீன்வளத் துறை துணை இயக்குநா் காத்தவராயன், உதவி இயக்குநா் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.