சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 49-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, ‘சிதம்பரம் ரகசியம் பாா்ட்-2’ வருகிற 26-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழகம் முழுவதும் போஸ்டா்கள் ஒட்டப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரிதான் என்ற ஆவணங்களை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.
மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உள்ள விதிமுறைகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும் என இந்திய மருத்துவக் கழகம், தமிழக அரசுக்கும், கல்லூரிக்கும் வழங்கிய கடித ஆவணங்கள் வெளியிடப்பட்டன.