கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக் கூட்டம் அண்ணாமலை நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், மாவட்ட ஜெ.பேரவைச் செயலா் கானூா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இளைஞரணி இணைச் செயலா் முருகையன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் மாவட்ட முன்னாள் செயலா் செல்வராஜ், ஒன்றியச் செயலா்கள் கோவி.ராசாங்கம், அசோகன், சுந்தரமூா்த்தி, வாசு.முருகையன், ஜோதிபிரகாஷ், கலியமூா்த்தி, பாலகிருஷ்ணன் உள்பட கழக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.