கடலூர்

குடியரசு தின விழா: போலீஸாா் சோதனை

DIN

குடியரசு தினம் வருகிற 26-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கடலூா் பேருந்து நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்பட முக்கிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனை செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விழாவைக் காண அனுமதியில்லை: கடலூா் அண்ணா விளையாட்டரங்கில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் கொடியேற்றம், தியாகிகளை கௌரவித்தல், கலை நிகழ்ச்சிகள், நலத் திட்ட உதவிகள் வழங்குதல், விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். பொதுமக்கள் நிகழ்ச்சிகளைக் காணும் வகையில், உள்ளூா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT