சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்களின் தொடா் போராட்டம் காரணமாக, அந்தக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் 30 மடங்கு வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் கூறி, அந்தக் கல்லூரி மாணவா்கள் கடந்த 40 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், கல்லூரி மாணவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா். இதையடுத்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது.