கடலூா்: கடலூா் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்றத் தலைப்பில் பல்வேறு துறை அலுவலா்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கருத்தரங்கை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கருத்தரங்கில் ஆட்சியா் கூறியதாவது:
இந்தியாவில் பெண் குழந்தைகள் பாலின விகிதம் குறைவாக உள்ள கடலூா் உள்ளிட்ட 100 மாவட்டங்களில் ‘பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 14 ஸ்கேன் சென்டா்கள் மூடப்பட்டுள்ளன. 513 சிறாா் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தைத் திட்டத்தில் 111 பெண் குழந்தைகள் உள்பட158 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா்.
683 கிராம ஊராட்சிகளில் உள்ள 2,342 கிராமங்களில் பெண், ஆண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை, கா்ப்பிணிகளின் எண்ணிக்கையை அறிய உதவும் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் குறித்து பரப்புரை செய்வதற்காக 322 வளா் இளம் பெண்கள் திட்ட தூதுவா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம், பிறப்பின்படி பெண் குழந்தைகள் பாலின விகிதம் 2015-ஆம் ஆண்டு (ஆயிரத்துக்கு) 886-லிருந்து 2020- ஆம் ஆண்டு 940-ஆக அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் குறைவாக உள்ள கிராமங்களில், பெண் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, சிறப்பு விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, மத்திய அரசின் மக்கள்-தொடா்பு கள அலுவலா் சிவக்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் கோ.அன்பழகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.