கடலூர்

மயான நிலம் ஆக்கிரமிப்பு: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN


கடலூா்: விருத்தாசலத்தில் மயான நிலம் ஆக்கிரமிப்பைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் நகரத்துக்கு உள்பட்ட பகுதி கஸ்பா காலனி. இந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக மயானத்துக்கு அதே பகுதியில் சுமாா் 60 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். இந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளதாகவும், எனவே, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தர வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாய், படுக்கையுடன் விருத்தாசலம் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமை வகித்தாா். கிளைச் செயலா்கள் கா்ணன், செந்தில், நெல்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சிவஞானம், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.கலைச்செல்வன் மற்றும் ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT