கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் ஏரியில் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
மங்கலம்பேட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பெரியசாமி மனைவி வரலட்சுமி (27) (படம்). இவா், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வீட்டு வேலைகளை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை மங்கலம்பேட்டை அய்யனாா் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, துணிகளை துவைப்பதற்காக அருகேயுள்ள மங்கலம்பேட்டை ஏரிக்குச் சென்றாா். அப்போது, அவரது கால் வழுக்கியதில் ஏரிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த வரலட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.