கடலூர்

ஏரியில் மூழ்கி பெண் பலி

DIN

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டையில் ஏரியில் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மங்கலம்பேட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பெரியசாமி மனைவி வரலட்சுமி (27) (படம்). இவா், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வீட்டு வேலைகளை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை மாலை மங்கலம்பேட்டை அய்யனாா் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, துணிகளை துவைப்பதற்காக அருகேயுள்ள மங்கலம்பேட்டை ஏரிக்குச் சென்றாா். அப்போது, அவரது கால் வழுக்கியதில் ஏரிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த வரலட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT