சிதம்பரம் இன்னா்வீல் சங்கம் மற்றும் அணி வணிகா் பழநிபாபு சாா்பில், ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளிக்கு 3 கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப் பட்டன.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா் எம்.ராம்குமாா் வரவேற்றாா். பள்ளி அறங்காவலா் மருத்துவா் சு.அருள்மொழிசெல்வன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பா.பழநி, ஜோதிமணி பழநி ஆகியோா் கலந்து கொண்டு பள்ளிக்கு கணினிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் வேதாசிவப்பிரகாசம், அனிதா தீபக் குமாா், வரலட்சுமி கேசவன், செல்வி முத்துக்குமரன், தாமரை சீனிவாசன், ஓய்வு பெற்ற பிடிஓ இளங்கோவன், சிவராமவீரப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியை இந்துமதி நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை எம்.தீபக்குமாா், உமா மகேஸ்வரி, ஆா்.சுமதி ஆகியோா் செய்திருந்தனா்.