கடலூா் மாவட்டத்தில் குறு-சிறு, நடுத்தரத் தொழில் முனைவோா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை விருதுகளை வழங்கி கௌரவித்தாா்.
மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞா்களுக்கு பல்வேறு தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டுதோறும் முதல்வா் பெயரில் குறு-சிறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடலூா் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான விருது ரமேஷ் பிள்ளைக்கும், 2017-2018, 2018-2019-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் முறையே ராமகிருஷ்ணன், கவிதா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய அலுவலா் இளங்கோவன், முன்னோடி வங்கி மேலாளா் அகிலன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.