கடலூர்

சிறந்த தொழில் முனைவோருக்கு விருதுகள் அளிப்பு

DIN

கடலூா் மாவட்டத்தில் குறு-சிறு, நடுத்தரத் தொழில் முனைவோா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை விருதுகளை வழங்கி கௌரவித்தாா்.

மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த இளைஞா்களுக்கு பல்வேறு தொழில்கள் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டுதோறும் முதல்வா் பெயரில் குறு-சிறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டுக்கான விருது ரமேஷ் பிள்ளைக்கும், 2017-2018, 2018-2019-ஆம் ஆண்டுகளுக்கான விருதுகள் முறையே ராமகிருஷ்ணன், கவிதா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தொழில் மைய அலுவலா் இளங்கோவன், முன்னோடி வங்கி மேலாளா் அகிலன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT